தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு பாம்பு சென்றுள்ளது. அந்த பாம்பை பிடித்த நபர் நேராக ஹைதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த மேஜையின் மீது விட்டுள்ளார்.

மேஜையில் விடப்பட்ட பாம்பு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு அதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த காணொளியில் தான் புகார் கொடுத்தது குறித்து அந்த நபர் கூறியுள்ளார். இதனால் புகாரை கண்டு கொள்ளாத ஆத்திரத்தில் அந்த நபர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.