உத்தர பிரதேஷ் மாநிலம் புடான் பகுதியை சேர்ந்தவர்கள் ஹஷன் அஸ்மா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது. தந்தை ஹசன் குழந்தையை தேடி அலைந்த போது கட்டிடங்களின் மேலே இருந்த காட்டு பூனை ஒன்றின் வாயில் குழந்தையை பார்த்துள்ளார்.

அவர் அந்த காட்டுப் பூனையிடமிருந்து குழந்தையை மீட்க முயற்சித்த போது குழந்தையை வாயிலிருந்து பூனை கீழே விட்டு விட்டது. இதனால் உயரத்தில் இருந்து கீழே விழுந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.