தமிழ் சினிமா உலகில் அண்ணனான செல்வராகவன் இயக்குனராகவும் தம்பியான தனுஷ் ஹீரோவாகவும் அறிமுகமாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான எல்லா திரைப்படங்களுமே ஹிட்டடித்தது. இதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தியது. இது போலவே செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் படமும் ரிலீஸ் ஆகி சில சர்ச்சைகளுக்கானாலும் நன்றாக ஓடியது.

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் செல்வராகவன் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் போது தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கின்றார். அந்த காலத்தில் தங்களிடம் சுத்தமாக பணம் இல்லை. சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டோம். இதனால் சொந்த ஊருக்கே குடும்பத்துடன் சென்றுவிடலாம் என தந்தை முடிவெடுத்தார். அந்த நேரத்தில் தான் கேட்டதற்காக கடன் வாங்கி தான் துள்ளுவதோ இளமை திரைப்படத்தை தயாரித்தார். எனக்காக பல இடங்களுக்கு சென்று பணத்தை கடன் வாங்கி வந்து கஷ்டப்பட்டார். என் படம் வெளியாகி ரசிகர்கள் செய்த ஆரவாரத்தை பார்த்து நான் கதறி கதறி அழுதேன் என கூறி இருக்கின்றார்.