சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் பல தொடர்களை இயக்கியிருக்கின்றார். இவர் தற்போது கோலங்கள் ஒளிபரப்பான நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலை இயக்குகின்றார். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியபோது, கோலங்கள் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தபோது எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

ஆனால் நான் இயக்கி நல்ல நிலையில் செல்லும் இந்த தொடரை விட்டு விலக எனக்கு மனம் கிடையாது. இதனால் சினிமா வாய்ப்பை நான் மறுத்து விட்டேன் என தெரிவித்திருக்கின்றார். இவரின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பலதரப்பு மக்களிடம் இருந்தும் கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.