ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சொந்தமாக கார் வைத்திருப்போர்,  ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மேல் உள்ளவருக்கு ஆயிரம் ரூபாய் கிடையாது. ஆண்டுக்கு 2.50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறும்  குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது.