தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 1000 திட்டத்திற்கு தகுதி உடைய பெண்களுக்கு டோக்கன் வழங்கி விண்ணப்பம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.

ஒவ்வொரு கடைகளிலும் குடும்ப தலைவிகளுக்கு உதவ ஒரு அலுவலர் இருப்பார். இதற்கான கட்டுப்பாட்டு அறை 17ம் தேதி முதல் தொடங்கும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்