மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவிலேயே முழுமையாக செயல்படுத்துவது தமிழ்நாட்டில் தான் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திட்டமிட்டு தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

ஊரக வளர்ச்சித்துறை மட்டுமல்லாது அனைத்து துறையும் மிக சிறப்பாக அரசு செயல்படுத்தி வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் 8 வாரம் ஊதியம் விடுவிக்கப்படவில்லை என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.’ இவ்வாறு அவர் கூறினார்.