சுதந்திரப் போராட்ட வீரர் கே.உனேரி தன்னுடைய 100வது வயதில் காலமானார். கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கக்கோடியில் நேற்று மாலை தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானார். இன்று காலை 11 மணிக்கு இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முக்கியமான தகவல்களை இவர் அனுப்பினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் கோழிக்கோட்டில் கொடியேற்றும் விழாவில் இவர் பங்கேற்றார். 1934 ஆம் ஆண்டு காந்திஜியின் கோழிக்கோடு விஜயத்தின் போது அவரை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.