காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற 31-ம் தேதி 10 நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறாராம். அமெரிக்காவில் ஜூன் 4-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மாடிசன் சதுக்க தோட்டத்தில் இருந்து ராகுல் காந்தி ஊர்வலம் செல்ல இருக்கிறாராம்.

இந்த ஊர்வலத்தில் சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா போன்ற மாகாணங்களிலும் ராகுல் காந்தி ஊர்வலம் நடத்த இருப்பதாக புறப்படுகிறது. மேலும் ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சிறப்பு உரையாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.