எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில் பணம் கண்டிப்பாக இரட்டிப்பாக கிடைக்கும் .

இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ஆயிரம் முதல் முதலீடு செய்யலாம். உதாரணமாக கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்தால் 115 ஆவது மாதத்தின் இறுதியில் முதலீடு செய்த பணம் ரெட்டிப்பாக கிடைக்கும். அதாவது 20 லட்சம் பணம் கிடைக்கும். மகளின் திருமணம் அல்லது படிப்பு செலவுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் இந்த திட்டத்தில் இணைந்து நல்ல பலனை பெறலாம்.