தமிழகத்தில் 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்டக் கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர் மற்றும் இதழியல் கலைஞர் உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடங்கள் அறிமுகமாகிறது. கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கவிஞர் மற்றும் செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள் மற்றும் அவர் செய்த சாதனைகள் அனைத்தும் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.