தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில் சுமார் 30 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 32,700க்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கினர். இஷிகாவா கடற்கரையில் ராட்சத அலைகள் உருவாகின.