இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2:40 மணிக்கு கோரக்பூரில் இருந்து அமிர்தசரஸுக்கு புறப்படும். அதன் பிறகு மார்ச் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 12:45 மணிக்கு மீண்டும் அமிர்தசரஸிலிருந்து கோரக்பூருக்கு கிளம்பும். இதனையடுத்து கோரக்பூரில் இருந்து மும்பைக்கு கோரக்பூர் பாந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும்.

இந்த ரயில் மார்ச் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.10 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு சென்று அங்கிருந்து மார்ச் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாலை 7.25 மணிக்கு மும்பையில் இருந்து மீண்டும் கோரக்பூருக்கு செல்லும். கோரக்பூர்-கேரளா செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணிக்கு கேரளாவில் இருந்து கோரக்பூருக்கு செல்லும்.  மறுமார்கத்தில் மார்ச் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் காலை 11:55 மணிக்கு மீண்டும் கேரளாவுக்கு திரும்பி செல்லும். மேலும் குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் சூரத் கர்மாலி எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 7-ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு கர்மாலியை சென்றடையும். இங்கிருந்து மார்ச் 8-ம் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு சூரத்தை சென்றடையும்.