மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியின் போது, ஆப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தலையில் பந்து தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் ஆடிக்கொண்டிருந்தபோது, 15-வது ஓவரில் ரன் எடுக்க முயன்ற குர்பாஸ், சக வீரர் மறுத்ததால் மீண்டும் கிரீஸிற்குத் திரும்பினார். அப்போது அவரை ரன் அவுட் செய்ய முயன்ற விண்டீஸ் பீல்டர் எறிந்த பந்து, எதிர்பாராத விதமாக குர்பாஸின் தலைக்கவசத்தின் (Helmet) பின்புறம் பலமாகத் தாக்கியது.
Cricket is an easy game? pic.twitter.com/uigmXgv7px
— NAHID (@NNahid67725) January 24, 2026
பந்து தாக்கிய வேகத்தில் குர்பாஸின் ஹெல்மெட் கழன்று காற்றில் பறக்க, அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அங்கிருந்த நடுவர் உடனடியாக ஓடிச்சென்று அவரது தலையைப் பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் மைதானத்தில் விளையாட்டு நிறுத்தப்பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாகப் பெரிய பாதிப்புகள் இன்றி தப்பிய குர்பாஸ், மீண்டும் எழுந்து விளையாடி 71 ரன்களைக் குவித்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிரிக்கெட்டில் பாதுகாப்பு உபகரணங்களின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
