மகாராஷ்டிராவில் பலூன் வியாபாரி ஒருவர் குழந்தைகளுக்கு பலூன் விற்பனை செய்ய வந்தபோது அவர் காத்தடைக்க வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலூன் விற்பனையாளர் உயிரிழந்துவிட்ட நிலையில் அவர் அருகே நின்ற 11 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.