ஹரியானா முன்னாள் MLA நஃபே சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய லோக்தள் கட்சித் தலைவரும், பகதூர்கர் தொகுதி Ex MLAவுமான நஃபே சிங், தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், நஃபே சிங், அவரது உதவியாளர் ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.