ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என்று கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக் கணக்கில் மூன்று லட்சத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் 35 ஆயிரம் ரூபாய் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவும் மூன்று லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். இதனை அவருடைய மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.