பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்து இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தென்னிந்திய சினிமா அளவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி இருந்தார். கனவு இல்லத்தை அங்கு கட்ட வேண்டும் என்று நடிகை ஸ்ரீதேவி ஆசைப்பட்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமல் 2018 ஆம் ஆண்டு குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கடைசி ஆசையை அவரது கணவர் போனி கபூர் தற்போது நிறைவேற்றியுள்ளார். அதாவது மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு நல்ல வீடு கட்டப்பட்டு அந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.