2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என ஸ்டாலின் சொன்னதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘ஸ்டாலின் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், அங்கு ஏழரைச்சனி பிடித்துக் கொள்ளும். ஸ்டாலின் அப்படி ராசியானவர். ஸ்டாலின் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்றார்.