தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர் பென்னாகரம் வார சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மித்ரன், நாகராஜ், மல்லிகா பூர்ணிமா, பிரசாந்த் ஆகிய ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.