விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3 பேர் இருந்தனர். இந்த 2 கார்களும் மொளச்சூர் அருகே சென்று  கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு அவ்வழியாக சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.