தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கேவி சீனிவாசன் இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி வைபவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.