தமிழகத்தில் மே மூன்றாம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணியமனம் செய்வதற்கு பதிலாக நிரந்தரமாக ஓட்டுநர்களை பணிக்கு எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மே 3 ஆம் தேதிக்கு பின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது.