இந்தியாவில் அஞ்சல் துறையில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாத வருமானம் ஈட்ட ஒரு நல்ல திட்டமாக மாதாந்திர வருமான திட்டம் உள்ளது. இது ஒரு டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் தோறும் முதலீடு செய்து சம்பாதிக்கலாம். இதில் அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதனைப் போலவே கூட்டு கணக்கில் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதத்தில் மாத வருமானம் கிடைக்கும்.

இதில் ஒரு முறை முதலீடு செய்து சுமார் ஐந்து ஆண்டுகள் வரை பணம் ஈட்ட முடியும்.. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பு பணம் தேவைப்பட்டால் அல்லது பணத்தை எடுக்க விரும்பினால் உங்களுக்கு தான் நஷ்டம். இதில் ஒரு வருடத்தில் பண வேண்டும் என்றால் நீங்கள் டெபாசிட் செய்த தொகையிலிருந்து அபராதம் பிடித்தம் செய்யப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.