உத்தர் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷிபா. இவரது அண்ணன் ரியாஸ். 18 வயதான ஆஷிபா அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபு எனும் இளைஞரை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதை அடுத்து ஆஷிபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காதல் ஜோடியை கண்டுபிடித்த காவல்துறையினர் சந்த் பாபுவை கைது செய்துவிட்டு ஆஷிபாவை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் வேறு மத இளைஞரை காதலித்து வீட்டை விட்டு ஓடிய சம்பவம் தொடர்பாக ஆஷிபாவுக்கும் அண்ணன் ரியாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவதம் முற்றிய நிலையில் வீட்டிலிருந்த கூர்மையான ஆயுதத்தால் ரியாஸ் தனது தங்கை ஆஷிபாவின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்து விட்டார். பின்னர் துண்டிக்கப்பட்ட தங்கையின் தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதை அடுத்து காவல்துறையினர் ரியாஸ் கொண்டு வந்த தலையையும் வீட்டில் இருந்த உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு ரியாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.