இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கருநாகம் ஒன்று வீட்டிற்குள் புகுந்தது மட்டுமல்லாமல் பூனையை வேட்டையாட முயற்சி செய்கிறது. அதனை முன்பே பார்த்து எச்சரித்துக் கொண்ட பூனை கருநாகத்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மின்னல் வேகத்தில் சென்ற அந்த பாம்பு பூனையை வேட்டையாடி விட வேண்டும் என ஆக்ரோஷத்தை காட்டும் நிலையில் தலையை அங்கும் இங்கும் ஆட்டி கொத்துகின்றது. பதிலுக்கு அந்த பூனையும் தன்னுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ள பாம்பை விட இரண்டு மடங்கு ஆக்ரோஷத்தை காட்டுகிறது.

இப்படியே இரண்டும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருக்க இறுதியில் பூனை தான் வெற்றி பெறுகிறது. இங்கு போட்டி போட்டு நாம் வெல்ல முடியாது என்று நினைத்த கருநாகம் வந்த வேகத்தில் அதே வழியில் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியே திரும்பி செல்கின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.