நெய்வேலியில் NLCநிர்வாகத்தை கண்டித்து இன்று பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தியதால் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, தஞ்சை மற்றும் சேலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.