ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒரு லட்சத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை கொண்டதாக வழங்கப்படும் நிலையில் இந்த விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபரின் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதி உரை தெளிவாகவும் அனைத்து விவரங்களுடனும் இருக்க வேண்டும். இந்த விருதுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் எனவும் டிசம்பர் 15ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.