திருவான்மியூர் ஆர்டிஒ அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமி என்ற பெண்ணை அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி அந்த பெண் கீழே விழ, எதிர் சாலையில் வந்த லாரி மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில், கார் ஓட்டுநர் அஸ்வந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.