பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருமானம் ஈட்டுவதுடன் தூய்மையையும் உறுதிப்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற 98-வது மன்கி பாத் நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் வீணடிப்பிலிருந்து வளம் என்பது ஒரு முக்கிய பரிமாணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு சான்றாக இரண்டு எடுத்துக்காட்டுகளை அவர் முன் வைத்துள்ளார்.

இதனால் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள உற்பத்தி பொருட்களை விற்று நல்ல வருவாயை ஈட்டுவதுடன் தூய்மையையும் உறுதிப்படுத்தப்படும் என அவர் பேசியுள்ளார். நாம் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால் தூய்மை இந்தியாவுக்கு என ஒரு பெரிய பங்காற்ற முடியும் என்பது பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிகளை எடுத்துச் செல்வோம் என ஒரு உறுதி மொழியாவது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையின் போது பேசி உள்ளார்.