திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

இதே போல் கோவை, மதுரை, சேலம், திருச்சி நெல்லையிலும் மெட்ரோ திட்ட பணிகளை செயல்படுத்த ஆய்வுகள் நடந்து வருகிறது. கோவை மற்றும் மதுரையில் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களிலும் இந்த பணிகள் ஏப்ரல், மாதம், மே மாதங்களில் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.