அதிகமான தொகையில் வீட்டுக்கடனை பெற நினைப்போர் ஒருசில வழிகளை கடைபிடிப்பதன் வாயிலாக அதிகளவு கடன் தொகையை பெறலாம். வீட்டுக்கடனைப் பெற சில வழிகள் இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் அதிக தொகையை பெற்று உங்களது கனவு வீட்டை ஈஸியாக வாங்கலாம் (அ) கட்டலாம். அதிக கடன் தொகை கிரெடிட் ஸ்கோர் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனை பொறுத்துதான் கடன் வழங்குனரால் வழங்கப்படுகிறது. அதே நேரம் ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு குறைந்த வட்டியில் அதிக வீட்டுக்கடன் தொகையை பெற உதவுகிறது.

SBI வங்கி முதல் ஹெச்டிஎப்சி வரையிலான வங்கிகள் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில்தான் வீட்டுக்கடன் தொகையை வழங்குகிறது. கடன் காலத்தினை அதிகரிப்பது வீட்டுக் கடனை திருப்பி செலுத்தக்கூடிய EMI தொகையை குறைக்கிறது மற்றும் அதிகளவு கடன் தொகையை பெற உங்களை அனுமதிக்கிறது. கடன் காலத்தினை அதிகரிப்பதற்கு நீங்கள் கடன் வழங்குவோரிடம் கேட்கலாம். உங்களுடன் மற்றொருவரையும் சேர்க்கும்போது உங்களுக்கு அதிகக் கடன் தொகை கிடைக்கப்பெறும். ஏனெனில் அதிகளவு கடன் தொகையை 2 நபர்களால் திருப்பிச்செலுத்த முடியும் என வங்கி நம்புவதால் இது நடக்கிறது. எனினும் வங்கிக் கடன் வழங்கும்போது 2 பேரின் தகுதியையும் சரிபார்க்கும்.