நடிகை சினேகா தமிழ் திரையுலகில் பல்வேறு முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் சினேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். சினேகா அவரது வீட்டில் 4-வது பெண்ணாக தான் பிறந்தாராம்.

பெண் குழந்தை பிறந்து விட்டதால் பாட்டி 3 நாட்கள் அருகில் கூட வரவில்லையாம். மூன்றுக்கு ஒன்று ப்ரீ என்று அவரது அண்ணன் கிண்டல் செய்வாராம். அதோடு வீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சினேகாவை அனைத்து வேலைகளையும் செய்ய வைப்பார்களாம். அதுபற்றி கேட்டால் நீ பொண்ணு நான் ஆண் என சொல்வார்களாம். அந்த அளவிற்கு வீட்டில் தான் பட்ட கஷ்டத்தை சினேகா எமோஷ்னல் ஆக கூறியிருக்கிறார்.