அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் நான்கு பேர் இறந்து கிடந்தனர்.

இதில் முதல் கட்ட விசாரணையில் இறந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் மூன்று பேரை சுட்டு கொலை செய்து விட்டு பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.