கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு கிராமத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் பாசன கால்வாய் ஓரம் மர்மமான முறையில் 3 மயில்கள் இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், விருதாச்சலம் வனத்துறையினரும் மயில்களின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து வனத்துறையினர் மயில்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மைல்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.