
தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயன் உள்ளதாக அமையும்.
அதன்படி, விவசாயிகள் இயற்கை பேரிடர் நிவாரணம், பயிர்கடன் ஊக்கத்தொகை, உதவித்தொகை உள்ளிட்டவைகளை பெற தனித் தனி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பத்தை தடுக்கும் வகையிலும் காலம் நேரத்தை குறைக்கும் நோக்கிலும் GRAINS எனும் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இணையதளம் முழுசும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற விண்ணப்பிக்கலாம். அதோடு இதில் 13-க்கும் அதிகமான துறைகளின் நலத்திட்ட பலன்களை விவசாயிகள் ஈஸியாக பெறும் அடிப்படையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.