
கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர் தனது வீட்டில் 4 நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பொன்வேலின் 5 வயது மகள் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சௌமியா நாயை ஏவி விட்டு கடிக்க வைத்ததாக தெரிகிறது. இதனால் காயமடைந்த சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொன்வேல் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சௌமியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ப்ளூ கிராஸ் அமைப்பினர் அந்த நாயை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.