விலைவாசி உயர்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர்  ஸ்டாலின் -ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு.!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், இவைகளை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 20.07. 2023 வியாழக்கிழமை அன்று நடைபெறும் என தெரிவித்துள்ளார்..

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை :