வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா, எல்டான்-பிரெட்டி போன்ற சிவிங்கிப் புலி ஜோடிகளானது மத்தியபிரதேசம் ஷியோபூரிலுள்ள குனோ விலங்கியல் பூங்காவில் திறந்துவிட்டப்பட்டது.

அதன் நடமாட்டத்தை அறிய அவற்றின் கழுத்தில் ரேடியோ காலர் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விலங்கியல் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய ஓபன் என்ற சிவிங்கிப்புலி அருகில் உள்ள கிராமத்தில் சுற்றித் திரிவது தெரியவந்துள்ளது. அதனைதொடர்ந்து ஜார் பரோடா கிராமத்துக்கு விரைந்துள்ள வனத்துறையினர் மற்றும் விலங்கியல் பூங்கா ஊழியர்கள் சிவிங்கிப் புலியை மீண்டும் பூங்காவுக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.