மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியின் போது, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரின் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இப்போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. பெவிலியனில் அமர்ந்திருந்த கோலியைப் பார்த்த அனுஷ்கா சர்மா, அவர் ஏன் களத்தில் இல்லை என்பது குறித்து சைகை மூலம் வினவினார்.

“>விளக்கிய உருக்கமான காரணம்

அதற்கு பதிலளித்த கோலி, தனக்கு கணுக்கால் காயம் மற்றும் கடுமையான தலைவலி காய்ச்சல் காரணமாக இருப்பதை மிகவும் அன்பான முறையில் சைகைகள் மூலம் விளக்கி கூறினார். வெயில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருந்தபோதிலும் அவர் ஜாக்கெட் அணிந்திருந்ததை ரசிகர்கள் கவனித்தனர்.

இதனால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த நட்சத்திர தம்பதியினர் பகிர்ந்து கொண்ட இந்த அழகான உரையாடல், ரசிகர்களிடையே ‘கப்பிள் கோல்ஸ்’ எனப் பாராட்டப்பட்டு வருகிறது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, கோலியின் அர்ப்பணிப்பையும் அவர்களின் பிணைப்பையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.