கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெட்டகத்தை கைப்பற்றியுள்ளனர். பயங்கரவாத பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியானது. இதனையடுத்து நேற்று இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சக்ரா கூறியதாவது, “இது குறித்து எந்தவித தகவலும் இங்கிலாந்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எங்களிடம் பகிரப்படவில்லை. ஊடகங்களின் அந்த அறிக்கைகள் உண்மையல்ல” என மறுப்பு தெரிவித்துள்ளார்.