ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த இந்தியப் பயணி ஒருவர், சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணத்தின்போது மது அருந்திய அந்தப் பயணி, போதையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் புகார் அளித்துள்ள நிலையில், விமானங்களில் மது பரிமாறுவதை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியப் பயணிகளின் பொது ஒழுக்கம் குறித்தும் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
Indians aren’t just a nuisance on the ground but also in the air
An Indian passengers urinated on fellow passengers in an air India flight
Never fly air India
Never fly to India …..
Most Indians have no concept of civic sense
Air India should stop serving alcohol onboard… pic.twitter.com/pirDxj4LQm
— 🦉 (@macroschema) December 29, 2025
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து “ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்” மற்றும் “இந்தியாவுக்கே செல்ல வேண்டாம்” என்ற ரீதியில் பல எதிர்மறையான கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அடிப்படை நாகரிகம் மற்றும் பொது அறிவு இல்லாமல் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஒரு தனிநபரின் தவறான செயலுக்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் குறை கூறுவது சரியல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
