சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதார சீர்கேட்டை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக இனிப்புகளுக்கு தடை என அதிகாரிகள் கூறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனைப் போலவே இலங்கைக்கு செல்லும் விமானங்களில் லுங்கி, வேட்டி மற்றும் சேலை போன்றவற்றையும் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளதாக பயணிகள் கூறியுள்ளனர்.