இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இளவரசர் ஆண்ட்ரூவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

முன்னதாக இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா பெர்குஷன் கடந்த ஆண்டு லண்டனில் ஐந்து பவுண்டுகள் செலவில் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இது வாடகைக்கு விடப்படாமல் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்தனர். இந்த குடியிருப்பானது சாராவின் மகள்களான பீட் ரைஸ் மற்றும் யூஜின் ஆகியோருக்கான முதலீடு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் லண்டனில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து இது மட்டும் தான். இதனால் மனைவி சாரா வாங்கியுள்ள இந்த வீட்டிற்கு இளவரசர் ஆண்ட்ரூ குடியேறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.