மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னரை ‘கன்கஷன் சப்ஸ்டிடியூட்’  முறையில் களமிறக்கிய முடிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் போது ஷர்துல் தாகூருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிந்த நிலையில், அதற்குப் பதிலாகத் தலையில் அடிபட்டால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கன்கஷன் விதியைப் பயன்படுத்தி சான்ட்னரை உள்ளே கொண்டு வந்தது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் தோள்பட்டை காயத்திற்கும் கன்கஷன் விதிமுறைக்கும் என்ன தொடர்பு என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளதோடு, விதிகளின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் தலையீடு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கன்கஷன் மாற்று வீரர் விதியானது வீரர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்றாலும், அதை ஒரு தந்திரோபாயமாக அணி நிர்வாகம் பயன்படுத்தியதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

“>

இது குறிப்பாக, ஒரு வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாகத் திறமையான சுழற்பந்து வீச்சாளரை மாற்றிய விதம், போட்டியின் சமநிலையைப் பாதிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.