ஓஸ்மானிய பல்கலையின் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரிகள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். உணவு தொழில்நுட்பத்தில் மூன்று பணியிடங்களும், மருந்தியல் துறையில் ஒரு பணியிடமும் காலியாக உள்ள நிலையில் UGP, AICTE விதிமுறைகளின் படி தகுதி பெற்று இருக்க வேண்டும். முதல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு டெமோ வகுப்பு செயல் திறன் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.