தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.