தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்யாலயம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படிக்கும் நிலையில், மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளியில் பணிபுரியும் ரமா என்ற ஆசிரியர் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களை விமானத்தில் இலவசமாக அழைத்து செல்வோம் என்று கூறியுள்ளார்.

இதன் பலனாக 12 மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் வந்துள்ளனர். இவர்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் பூங்கா ஆகிய பகுதிகளை மாணவர்களுக்கு சுற்றி காண்பித்து விட்டு மீண்டும் மாலையில் ரயில் மூலம் தூத்துக்குடிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகளை இலவசமாக விமானத்தில் அழைத்து சென்றது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.