தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இவர் தற்போது லியோ படத்திற்கு பிறகு பி ஒருசில படங்களில் கமிட்டாகி உள்ளார். ஏனெனில் லியோ படத்தில் பிஸியாக இருந்த விஜய் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து வந்தார். இதனால் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் #Thalapathy68 படத்திற்குபின் 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருக்க விஜய் முடிவு செய்துள்ளதாக  பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இது போன்று பரவும் வதந்தியான தகவல்களுக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது விஜய் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க போவதில்லை. தொடர்ந்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இதை கேட்டா விஜய் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்கள்.