நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். இதனையயடுத்து விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுக்கு திரையுலகில் இருந்து ஆதரவு கரம் நீட்டினார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரெடியாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் மகன் நடிக்கும் “படை தலைவன்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகிவரும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லாரன்ஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.